1. தேவனுடைய  திட்டம்

  தேவன் மனிதன்மூலமாக தம்மை வெளியாக்க விரும்பு கிறார் (ரோமர் 8:29). இந்த நோக்கத்திற்காகவே அவர் மனிதனை அவருடைய சொந்த சாயலில் சிருஷ்டித்தார் (ஆதி. 1:26).ஒரு கையுறை கையை உள்ளடக்கிக் கொள்வதற்காகக் கையின் சாயலில் உருவாக்கப்படுவது போல, மனிதனும் தேவனை உள்ளடக்கிக்கொள் வதற்காக தேவனின் சாயலில் உருவாக்கப் பட்டான். அவன், தேவனை தன் உள்ளடக்க மாகப் பெற்றுக்கொள்வதினால் தேவனை வெளி யாக்கமுடியும் (2 கொரி. 4:7).

2. மனிதன்

தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேவன் மனிதனை ஒரு பாத்திரமாக உண்டாக்கினார் (ரோமர் 9:21-24). இந்தப் பாத்திரம் மூன்று பகுதிகளைக் கொண்டது: ஆவி, ஆத்துமா, சரீரம் (தெச.5:23).சரீரம்,பௌதீக மண்டலத்திலுள்ள பொருட்களைத் தொடர்புகொண்டு, பெற்றுக்கொள்கிறது. மனதிற்குரிய புலனாகிய ஆத்துமா, உளவியல் மண்டலத்திலுள்ள காரியங்களைத் தொடர்புகொண்டு, பெற்றுக்கொள்கிறது. மனிதனுடைய மிக உள்ளார்ந்த பகுதியாகிய மனிதனுடைய ஆவி, தேவனைத் தொடர்புகொள்வதற்காகவும், பெற்றுக்கொள் வதற்காகவும் உண்டாக்கப்பட்டது (யோவான் 4:24). வெறுமனே உணவை வயிற்றிலும், அறிவை மனதிலும் அடக்கிக்கொள் வதற்காக அல்ல, மாறாக தேவனை தன் ஆவியில் உள்ளடக்கிக் கொள்வதற்காகவே மனிதன் உண்டாக்கப்பட்டான் (எபே. 5:18).

3.மனிதனுடைய  வீழ்ச்சி

  ஆனால், மனிதன் தேவனை தன் ஆவிக்குள் ஜீவனாகப் பெற்றுக் கொள்வதற்குமுன், பாவம் அவனுக்குள் நுழைந்துவிட்டது (ரோமர் 5:12). பாவம் அவனது ஆவியை மரிக்கச்செய்தது (எபே. 2:1), அவனுடைய மனதில் அவனை தேவனுடைய எதிரியாக்கியது (கொலோ. 1:21), மற்றும் அவனுடைய சரீரத்தைப் பாவம் நிறைந்த மாம்சமாக தரம் இழக்கச்செய்தது (ஆதி. 6:3; ரோமர்6:12). இப்படி பாவம் மனிதனுடைய மூன்று பகுதிகளையும் பழுதடையச்செய்து, அவனை தேவனுக்கு அன்னியனாக்கியது. இந்த நிலையில் மனிதன் தேவனைப் பெற்றுக்கொள்ள இயலாது.  

4. தேவனுடைய பகிர்ந்தளித்தலுக்காக கிறிஸ்துவின் மீட்பு 

  தேவன் தம் ஆதி திட்டத்தை நிறைவேற்றாதபடி மனிதனுடைய வீழ்ச்சி அவரை நிறுத்திவிடவில்லை. அவருடைய திட்டத்தைச் செய்துமுடிப்பதற்காக, முதலாவது தேவன் இயேசுகிறிஸ்து என்றழைக்கப்பட்ட ஒரு மனிதனாக மாறினார் (யோவான் 1:1,14). பின்பு மனிதனை மீட்க கிறிஸ்து சிலுவையில் மரித்தார் (எபே. 1:7), இப்படியாக அவனுடைய பாவத்தைப் போக்கி (யோவான் 1:29), அவனை தேவனிடம் மீண்டும் கொண்டுவந்தார் (எபே. 2:13). இறுதியாக, உயிர்த்தெழுதலில் அவர் ஜீவன் தரும் ஆவியானவராக மாறினார் (1 கொரி. 15:45). இதனால் அவருடைய ஆராய்ந்தறியமுடியாத ஐசுவரியமான ஜீவனை மனிதனுடைய ஆவிக்குள் அவரால் பகிர்ந்தளிக்க முடிந்தது (யோவான் 20:22;3:6).

5. மனிதனை மறுபடிஜெநிப்பித்தல்

    கிறிஸ்து ஜீவன் தரும் ஆவியானவராக மாறியிருப்பதால், இப்பொழுது மனிதன் தேவனுடைய ஜீவனை தன் ஆவிக்குள் பெற்றுக்கொள்ளமுடியும். வேதாகமம் இதை மறுபடிபிறத்தல் என்றழைக்கிறது (1 பேதுரு 1:4; யோவான் 3:3). இந்த ஜீவனைப் பெற்றுக்கொள்ள மனிதன் தேவனிடம் மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்க வேண்டும் (அப். 20:21; 16:31). மறுபடிபிறப்பதற்கு, வெறுமனே திறந்த இருதயத்துடன் கர்த்தரிடம் வந்து, இப்படியாக அவரிடம் கூறுங்கள்:
கர்த்தராகிய இயேசுவே, நான் ஒரு பாவி. நீர் எனக்குத் தேவை. எனக்காக மரித்ததற்காக உமக்கு நன்றி. கர்த்தராகிய இயேசுவே, என்னை மன்னியும். என் பாவங்கள் எல்லாவற்றிலிருந்தும் என்னை சுத்திகரியும். நீர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தீர் என்பதை விசுவாசிக்கிறேன். இப்பொழுதே உம்மை என் இரட்சகராகவும் ஜீவனாகவும் பெற்றுக்கொள்கிறேன். எனக்குள் வாரும்! உம்முடைய ஜீவனால் என்னை நிரப்பும்! கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நோக்கத்திற்காக என்னை உம்மிடம் தருகிறேன்.

6. தேவனுடைய முழுமையான  இரட்சிப்பு

ஒரு விசுவாசி மறுபடிபிறந்தபிறகு ஞானஸ்நானம் பெறவேண்டும் (மாற்கு 16:16). பின்பு தேவன் விசுவாசிகளுடைய ஆவியிலிருந்து ஆத்துமாவிற்குள் தம்மையே ஜீவனாக படிப்படியாக பரப்புகின்ற வாழ்நாள் முழுவதுமான வழிமுறையை ஆரம்பிக்கிறார் (எபே. 3:17). மறுசாயலாக்கப்படுதல் (ரோமர் 12:2) என்ற இந்த வழிமுறைக்கு, மனித ஒத்துழைப்பு தேவைப்படுகிறது (பிலி. 2:12). விசுவாசி, அவனுடைய எல்லா ஆசைகளும், எண்ணங்களும், தீர்மானங்களும் கிறிஸ்துவினுடையதாக மாறும்வரை அவனுடைய ஆத்துமாவிற்குள் பரவுவதற்கு கர்த்தரை அனுமதிப்பதின்மூலம் ஒத்துழைக்கிறான். இறுதியாக, கிறிஸ்து திரும்பிவரும்போது விசுவாசிகளுடைய சரீரத்தை தேவன் அவருடைய ஜீவனால் பூர்த்தியாக நிரப்புவார். இது மகிமைப்படுத்தப்படுதல் என்றழைக்கப் படுகிறது (பிலி. 3:21). ஒவ்வொரு பகுதியிலும் வெறுமையாகவும், பழுதடைந்தும் இருப்பதற்குப் பதிலாக, இந்த மனிதன் தேவனுடைய ஜீவனால் பூர்த்தியாக நிரப்பப்படுகிறான். இதுவே தேவனுடைய முழுமை யான இரட்சிப்பு! இப்படிப்பட்ட மனிதன், இப்போது தேவனை வெளி யாக்குகிறான், தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுகிறான்!